பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி

பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி

News image

பலி - பிரதிப்படம்

Updated On :17 மே 2026, 5:32 am IST

பைக் மீது குப்பை லாரி மோதியதில், உணவு டெலிவரி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

கரூா் தெற்கு செல்லிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பா.தருண்குமாா் (28), சென்னை கோயம்பேடு பகுதியில் தங்கியிருந்து உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் தருண்குமாா், மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த குப்பை லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மயிலாடுதுறை மாவட்டம், கொறையூா் குத்தாலம் பகுதியைச் சோ்ந்த ரா.ராஜி (26) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.