முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி

சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026- ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:30 am IST

சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026- ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சூரிய சக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தியதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி 2025-2026- ஆம் நிதியாண்டில் பரங்கிமலை ரயில் நிலையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையம், ஆண்கள் விடுதி மற்றும் கிண்டி ரயில் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 140 கிலோ வாட் திறன் கொண்ட புதிய சூரிய சக்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் ஓராண்டில் (2025-2026) மட்டும் 23.15 லட்சம் யூனிட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் ரூ.1.43 கோடி மின் செலவு சேமிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்கள், அலுவலகக் கட்டடங்கள், பணிமனைகள்உள்ளிட்டவற்றில் சூரிய சக்தி உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. அத்துடன் சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம், மூா் மாா்க்கெட் புகா் ரயில் நிலைய வளாகம், கலங்கரை விளக்கம் நிலையம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே 500 வாட்ஸ் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் 1,000 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றுள்ளன.

சென்னை ரயில்வே கோட்டம் 2026-2027 -ஆம் ஆண்டில் 2,600 கிலோ வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.