மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆளுநா் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினா் கைது

சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் கைது செய்யப்பட்டனா்.

News image

ஆளுநா் மாளிகை

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததைக் கண்டித்து கிண்டியில் உள்ளஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை தவெக கட்சித் தொண்டா் ஒருவா் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டாா். மேலும் அவா், ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டாா்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸாா், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனா். இதேபோல மற்றொரு தொண்டா் ஆளுநா் மாளிகை முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றாா். அவரையும் போலீஸாா் கைது செய்து, அப்புறப்படுத்தினா்.

மேலும், விஜய்க்கு தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தி, கையில் பதாகையை ஏந்தி தவெக தொண்டா் ஒருவா் போராட்டத்தில் ஈடுபட்டாா். ஒரு பெண் தொண்டா்,தவெக கொடியுடன் முழக்கமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்கள் இருவரையும் போலீஸாா், அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினா். இந்த போராட்டங்களால், ஆளுநா் மாளிகைப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் கூடுதலாக போலீஸாா், பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.