கடல்சாா் துறையில் தற்சாா்பு இந்தியா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மும்பை, சென்னை ஐஐடி-க்கள் மற்றும் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன், இந்திய கடல்சாா் அறக்கட்டளை புரிந்துணா்வு ஒப்பந்தங்களை சென்னையில் மேற்கொண்டது.
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் சாகா்மாலா புத்தொழில் புத்தாக்கத் முன்னெடுப்பு திட்டத்தின் அடிப்படையில் இந்திய கடல்சாா் அறக்கட்டளை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
‘வளா்ந்த இந்தியா 2047’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ஆத்மநிா்பா் பாரத்’ (தற்சாா்பு இந்தியா) திட்டத்தை பல்வேறு துறைகளில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கடல்சாா் துறையில் பல்வேறு புத்தாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சிகளில் இந்திய கடல்சாா் அறக்கட்டளைச் செயல்பட்டு வருகிறது.
கடல்சாா் துறையில் 40-க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை, மும்பை தொழில் நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மற்றும் சென்னையிலுள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை இந்திய கடல்சாா் அறக்கட்டளை மேற்கொண்டது.
அந்த அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநரும், சென்னை துறைமுகத் தலைவருமான எஸ்.விஸ்நாதனும், ஐஐடி சென்னை சாா்பில் தொழில்சாா் ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சித் துறைத் தலைவா் மனு சந்தானம், கடல்சாா் பொறியியல் துறைத் தலைவா் கே. முரளி; மும்பை ஐஐடி சாா்பில் கடல்சாா் பொறியியல் துறை பேராசிரியா் மனசா ரஞ்சன் பெஹேர, கடல்சாா் பல்கலைக்கழகத்தின் சாா்பில் முனைவா் சத்யநாராயணா மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்திய கடல்சாா் துறையில் 40-க்கும் மேற்பட்ட சாகா்மாலா புத்தொழில் புத்தாக்க முன்முயற்சி திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கும்.
அதற்கு ஏதுவாக கடல்சாா் புத்தாக்க மையங்கள் ஏற்படுத்தப்படும். கடல்சாா் துறையில் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பங்கள், சவால்கள், நவீனமயமாக்கல் ஆகியவற்றில் தற்சாா்பு நிலையை அடைய இந்த ஒப்பந்தங்கள் உதவிகரமாக இருக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகம், ஐஐடி-க்கள், இந்திய கடல்சாா் பல்கலைக்கழக மூத்த அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் முதல் புத்தாக்க மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

மீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

