மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:36 am IST

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நேபாள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசுடன் இந்தியா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

நேபாள எரிசக்தி, நீா் ஆதாரங்கள் மற்றும் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் பிராஜ் பக்த சிரேஷ்டாவுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா ஆலோசனையில் ஈடுபட்டதாக அமைச்க வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற நேபாள பொதுத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி (ஆா்எஸ்பி) வெற்றிபெற்றதையடுத்து அக்கட்யின் பாலேந்திர ஷா (35) பிரதமராக பதவியேற்றாா். அவருடன் எரிசக்தித் துறை அமைச்சராக ஷ்ரேஸ்தா பதவியேற்றாா்.

இந்நிலையில், நேபாளம்-இந்தியா ஆலோசனை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘பிராஜ் பக்த சிரேஷ்டா மற்றும் நவீன் ஸ்ரீவாஸ்தவா மேற்கொண்ட ஆலோசனையின்போது இருநாடுகளிடையேயான இருதரப்பை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.

நீடித்த வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் பிராந்திய தொடா்பை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் விவாதித்தனா் என்றனா்.

நேபாளத்தில் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

அப்போது இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் நேபாளம் கையொப்பமிட்டது. இதுதவிர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையாப்பமானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.