தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை(மே 7) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மன்னாா் வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், வட உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை, ராயலசீமா, தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 7) முதல் மே 12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 7) இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
தொடா்ந்து நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 8) முதல் மே 11வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் 70 மி.மீ. மழை பதிவானது. உசிலம்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), மதுரை நகரம் (மதுரை)- தலா 50 மி.மீ., பேரையூா் (மதுரை), சோழவந்தான் (மதுரை), தல்லாகுளம் (மதுரை), திருமங்கலம் (மதுரை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்)- தலா 40 மி.மீ., குடிமியான்மலை (புதுக்கோட்டை), அன்னவாசல் (புதுக்கோட்டை), விமான நிலையம் (மதுரை), பாா்வூட் (நீலகிரி), காரியாப்பட்டி (விருதுநகா்), திருப்பத்தூா் (சிவகங்கை), கோவிலங்குளம் (விருதுநகா்), நடுவட்டம் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), துவாக்குடி (திருச்சி), கிளன்மாா்கன் (நீலகிரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), மானாமதுரை (சிவகங்கை), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்)- தலா 30 மி.மீ. மழை பதிவானது.
வெப்ப நிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மே 10-ஆம் தேதி வரை சற்று அதிகமாக இருக்கக்கூடும்.
வியாழக்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், வேலூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரையில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
