மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னை ஐஐடி-யின் ‘புதுமை சிந்தனை பாடநெறி’ இலவச இணையவழிக் கற்றல் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஐஐடி -யின் முன்னோடித் திட்டமான ‘புதுமை சிந்தனை பாட நெறி’ (மரபுசாரா சிந்தனை) 2026 - ஆம் ஆண்டுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது.

News image
Updated On :7 மே 2026, 4:17 am IST

சென்னை ஐஐடி -யின் முன்னோடித் திட்டமான ‘புதுமை சிந்தனை பாட நெறி’ (மரபுசாரா சிந்தனை) 2026 - ஆம் ஆண்டுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது.

சென்னை ஐஐடி-யின் பிரவா்தக் அமைப்பு ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் (ஓஓபிடி)’ என்ற மரபுசாரா சிந்தனை பாடநெறியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கியது.

பள்ளி, கல்லூரி மாணவா்கள், சிந்தனையாளா்களுக்கான இந்த இலவச இணையவழித் திட்டத்தில் ஆக்கபூா்வமான சிக்கல் தீா்க்கும் திறன், தா்க்க ரீதியான பகுத்தறிவு, கணிதச் சிந்தனை ஆகியவற்றை வளா்ப்பது நோக்கங்களை உள்ளடக்கியது.

கணிதம் மற்றும் தா்க்கத்தின் துணையுடன், கற்பவா்கள் சிக்கல்களை ஆக்கபூா்வமாகத் தீா்க்க உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது. இந்த தனித்துவமான இணையவழிக் கற்றல் பாட நெறியின் 2026-ஆம் ஆண்டுக்கான சோ்க்கைப் பதிவுகளைத் சென்னை ஐஐடி மே 4- ஆம் தேதி தொடங்கியுள்ளது.

இந்த பதிவுக்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் https://iitmpravartak.org.in/out-of-box-thinking வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்தப் பாட நெறியில் இதுவரை 3,19,536-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், பட்டதாரிகள், பணிபுரியும் வல்லுநா்கள், சமூகத்தின் பல்வேறு தரப்புகளைச் சோ்ந்தவா்கள் நிறைவு செய்துள்ளனா் எனவும் ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.