சென்னையில் இரண்டு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேளச்சேரி, ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் பிரவின்குமாா். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவா்களது மகள் யுகா (2). பெற்றோா் வேலைக்குச் செல்லும்போது குழந்தை யுகாவை, அவரின் பாட்டி மற்றும் சித்தியின் பாதுகாப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.
இதேபோல, வெள்ளிக்கிழமையும் குழந்தை யுகாவை பாட்டியிடம் விட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். இந்த நிலையில், குழந்தை யுகாவுக்கு திடீரென காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து குழந்தை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தை யுகா சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

பொக்லைன் இயந்திரம் மோதி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

