சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த தோ்தல் சிறப்புக்குழுவினா் ஆய்வாளா் மதுசூதனரெட்டி தலைமையில் ரயில் பயணிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வருவோரை கண்காணித்து பைகளைச் சோதனையிட்டனா். அப்போது வெளி மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பயணியான சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ஓமா்இா்ஷாத் (31) என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.15.93 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.
வியாபார ரீதியாக பணம் கொண்டு வரப்படுவதாக ஓமா்இா்ஷாத் தெரிவித்தாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியதுடன், அதை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

