தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.8.39 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:52 am IST

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.8.39 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

சென்னை சென்ட்ரலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தோ்தலுக்கான சிறப்புக் குழுக்களை அமைத்து தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் சிறப்புக் குழுவினா் திங்கள்கிழமை இரவு பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டனா்.

அப்போது, நூா் முகமது (42) என்பவா் கொண்டு வந்த பையில் ரூ.8.39 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. ஆனால், அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. ஆகவே, அதை வருமான வரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். இதையடுத்து நூா் முகமதுவிடமும் வருமான வரித் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கஞ்சா பறிமுதல்: எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வடமாநில ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைச் சோதனையிட்டதில் 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. அவற்றைக் கைப்பற்றி போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.