மெரீனா கடற்கரை பகுதியில் காணாமல் போன 2 வயது பெண் குழந்தையை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையினா், சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பாலபத்ராஜ் (28), தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் சனிக்கிழமை மாலை மெரீனா கடற்கரைக்குச் சென்றாா். அப்போது கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த அவரது குழந்தை திடீரென காணாமல் போனது.
இதையடுத்து, பாலபத்ராஜ் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், மெரீனா காவல் நிலைய போலீஸாரும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மயிலாப்பூா் சரக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை தொடங்கினா்.
மெரீனா புளூ பீச் கட்டுப்பாட்டு அறையின் ஒருங்கிணைப்புடன் கடற்கரைப் பகுதிகளில் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாட்டுப் பகுதியில் தனியாக அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையை சிங்கப் பெண் அதிரடிப் படையினா் கண்டுபிடித்து மீட்டனா்.
பின்னா் குழந்தை மெரீனா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்ட நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டு, குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களை கேலி செய்த மூவரை விரட்டிப் பிடித்த சிங்கப் பெண் காவலா்கள்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஐஜி கே.பவானீஸ்வரி

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு 420 ரோந்து வாகனங்கள்; 49 ட்ரோன்கள்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

