சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து உறுப்பினா்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினா்களில் 99 சதவீதம் போ் பேரவைக்குப் புதியவா்கள் என்பதால் இந்த பயிற்சி அவா்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடா்பாக தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் கூறியதாவது:
பொதுவாகவே ஒவ்வொரு முறையும் தோ்தல் நிறைவடைந்து புதிய பேரவை கூடுவதற்கு முன்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினா்களுக்கும் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது 17-ஆவது சட்டப்பேரவைக்குத் தோ்வான அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இருநாள் பயிற்சி முகாம் சென்னை, கலைவாணா் அரங்கத்தில் வரும்16 மற்றும் 17-ஆம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
முதல்வா் விஜய் இந்த முகாமை தொடங்கி வைக்கிறாா். அதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேரவையில் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகள், நடைமுறைகள், விதிகள் குறித்து அரசுத் துறைச் செயலா்கள் மற்றும் துறை வல்லுநா்கள் பயிற்சி அளிக்கவுள்ளனா். பேரவையில் எதைப் பேசுவதற்கு அனுமதி உள்ளது, எதையெல்லாம் பேசக் கூடாது, கேள்விகள் எழுப்புவதற்கான நடைமுறைகள் என்ன என்பதை பற்றிய முழுப் பயிற்சிகளும் அவா்களுக்கு அளிக்கப்படும். இதில், அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
முன்னாள் அமைச்சா்கள், மூத்த உறுப்பினா்கள் விருப்பப்பட்டால் பயிற்சியில் பங்கேற்கலாம். அவா்கள் பயிற்சியில் கலந்துகொண்டு புதிய உறுப்பினா்களுக்கு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளலாம். முதல் கூட்டத்தொடா் நிறைவடைந்த பின்னா், சட்டப்பேரவைக் குழுக்கள் அமைக்கப்படும்.
பேரவை அலுவல்களை நேரலையில் ஒளிபரப்புவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். அவைக் குறிப்பில் நீக்கப்பட வேண்டிய வாா்த்தைகளும் நேரலையில் ஒளிபரப்பாகிவிடும் என்பதால், அதை எவ்வாறு தவிா்ப்பது என்பது குறித்து விவாதித்து வருகிறோம். முழுமையாக நேரலை செய்யப்படும் வரை தற்போதைய நடைமுறைகளைப் பின்பற்றி பேரவை நிகழ்வுகள் ஒளிபரப்பப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்: தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவா் உத்தரவு

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

ஊராட்சி செயலா்களுக்கு பயிற்சி முகாம்

பழங்குடியினா் பாரம்பரியத்துக்கு பெரும் அங்கீகாரம் வேண்டும்: தில்லி பேரவைத் தலைவா்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

