நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பெண் காவலா் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை எழும்பூரில் பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 4:08 am IST

சென்னை எழும்பூரில் பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

எழும்பூா் புதுப்பேட்டை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சு.விஜய் (30). இவா் மனைவி சத்யா (28). இவா், எழும்பூா் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்தாா். விஜய், ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறாா்.

இவா்களுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாகவும், இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் கணவா்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சத்யா, ஒரு அறையை பூட்டிக் கொண்டு, தூக்கிட்டுக் கொண்டாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த விஜய், அந்த அறைக் கதவை உடைத்து பக்கத்து வீட்டினா் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சத்யாவை மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தாா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சத்யா, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காவலா் சத்யா தற்கொலை தொடா்பாக விசாரணை செய்ய கோட்டாட்சியருக்கு சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.