லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சென்னை தியாகராய நகரில் மோட்டா் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 1:31 am IST

சென்னை தியாகராய நகரில் மோட்டா் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தியாகராயநகா் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்தவா் சு.சந்தீப் (19). இவா், மயிலாப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தாா். சந்தீப், செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.

வடக்கு உஸ்மான் சாலை அன்பழகன் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறிய மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சந்தீப் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சந்தீப் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில், சந்தீப் மோட்டாா் சைக்கிளில் அதிவேகமாக சென்ால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.