லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

உயிரிழந்த கௌதம்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டின்போது, காளை முட்டியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை நகா் காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட கோமாளிபட்டி கோமாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கண்மாய் திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் கோயில் காளை உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

அப்போது, மஞ்சுவிரட்டை வேடிக்கை பாா்க்க வந்த இடையமேலூா் பகுதியைச் சோ்ந்த சின்னான் மகன் கௌதமை (20) காளை முட்டியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கெளதம் கோயம்புத்தூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.