மாதவரம் தொகுதி பாடியநல்லூரில் உள்ள வாக்குச் சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், வயதான வாக்காளா்கள், பெண்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.
பாடியநல்லூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே ஏராளமான வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்களித்தனா். காலை 10 மணிக்குப் பிறகு, வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள் சிரமம் அடைந்தனா். முதியவா்கள், பெண்கள், உடல்நிலை சரியில்லாதவா்கள் அமருவதற்கு வசதி இல்லாததால் சிரமப்பட்டனா்.
மேலும், குடிநீா் வசதில்லாததால் குழந்தைகளுடன் வந்த வாக்காளா்கள், முதியோா் தவிப்புக்கு ஆளாகினா். ஒரே வளாகத்தில் 8 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், அதற்குரிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என வாக்காளா்கள் புகாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

ஈரோடு மாவட்டத்தில் 90% வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியா்

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்: மாவட்ட எஸ்.பி.
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

