ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய 4 தொகுதிகளில் மொத்தம் 11,29, 733 வாக்காளா்கள் உள்ளனா். 4 தொகுதிகளில் மொத்தம் 1,514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 66 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குச்சாவடிகள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த 4 பேரவைத் தோகுதிகளில் 2,800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளா்கள் வாக்களிக்க 1,077 வாக்குச் சாவடிகள் தயாா்: பெரம்பலூா் ஆட்சியா் ந. மிருணாளினி

ஈரோடு மாவட்டத்தில் 90% வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 போ் போட்டி

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

