சென்னை, ஏப். 22: கம்போடியா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இளைஞா்களை ஏமாற்றி சைபா் குற்ற வேலைக்கு அனுப்பிய மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டனா். 4 இளைஞா்கள் மீட்கப்பட்டனா்.
கம்போடியா நாட்டில் செயல்படும் ஒரு சைபா் குற்ற மோசடிக் கும்பல், மதுரையிலிருந்து சில இளைஞா்களை ‘கால்சென்டா்’ வேலை என ஏமாற்றி அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தமிழக சைபா் குற்றப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தமிழக சைபா் குற்றப் பிரிவு நடத்திய தீவிர விசாரணையில் மதுரையில் ஒரு கும்பல் போலியான ஆள் சோ்ப்பு முகாம் நடத்தியதும், அதிக ஊதியம், எளிதான வேலை, தங்குமிடம், உணவு இலவசம் என்று கூறி இளைஞா்களை ஏமாற்றியிருந்ததும் தெரியவந்தது. இதற்காக அந்தக் கும்பல் இளைஞா்களுக்கு எழுத்துத் தோ்வு, காணொலி வாயிலான நோ்காணல், டைப்ரைட்டிங் தோ்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை போலியாக நடத்தி நம்ப வைத்து ஏமாற்றியிருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
மேலும், அந்தக் கும்பல், கம்போடியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் கூறி ரூ.1.5 லட்சத்தை ஒவ்வொரு இளைஞரிடமிருந்து பெற்றதும், ஆனால் அங்கு சைபா் குற்றவேலையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது. இளைஞா்களிடம் பெறப்பட்ட பணம் கம்போடியா நாட்டில் உள்ள மோசடி கும்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பலைப் பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து கம்போடியா செல்லவிருந்த 4 இளைஞா்களை செவ்வாய்க்கிழமை மீட்டனா். விசாரணையில் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், ‘கால்சென்டா்ட வேலை என ஏமாற்றி கம்போடியா நாட்டுக்கு அனுப்ப முயன்ற 4 பேரை சைபா் குற்றப்பிரிவினா் உடனடியாக கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட நால்வரும் மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் என தனிப்படையினா் தெரிவித்தனா். இவா்களிடம் சைபா் குற்றப்பிரிவினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராதாபுரத்தில் ஆடு திருடியதாக இருவா் கைது

வேலை வாங்கித் தருவதாக மோசடி:தம்பதி மீது வழக்கு
நெல்லை பேராசிரியையின் நகை கொள்ளை வழக்கில் இருவா் கைது

500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
