மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கு வங்கம் ஷாலிமரிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் 22- ஆம் தேதி கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:29 am IST

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் 22- ஆம் தேதி கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால ரயில் பயணத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு ஷாலிமரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06098) மறுநாள் வியாழக்கிழமை (ஏப்.23) காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

சிறப்பு ரயிலில் 8 தூங்கும் வசதி பெட்டிகள், 10 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட 13 நிலையங்களில் நின்று செல்லும். அந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.