சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
சென்னை நகரில் பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்கள், கால்டாக்சிகள் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயுவைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. அதேபோல், பல சிறு வணிக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கான பேருந்துகளும் தற்போது சிஎன்ஜி எரிவாயுவில் இயக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பலா் தங்கள் வாகனங்களின் கட்டமைப்பை எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயு மூலம் இயக்கும் வகையில் மாற்றி அமைத்திருந்தனா்.
வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளைக்கு ஏற்கெனவே தட்டுப்பாடு நிலவி வந்தாலும், வாகனங்களுக்கான எல்பிஜி எரிவாயு பல இடங்களில் கிடைத்து வந்தது.
ஆனால், கடந்த சில நாள்களாக வாகனங்களுக்கான எரிவாயு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடகை வாகன ஓட்டுநா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். வடபழனி, எழும்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல எல்பிஜி எரிவாயு நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டதால், ஆட்டோக்கள், காா்களுக்கு எரிவாயு நிரப்ப எரிவாயு நிலையங்களைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சிஎன்ஜி எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வாடகை வாகன ஓட்டுநா் சங்க நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:
சிஎன்ஜி எரிவாயு சிறிது தட்டுப்பாடு இருந்தாலும், ஓரளவு கிடைத்து வருகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாகவே எல்பிஜி எரிவாயு கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. ஏற்கெனவே பொருளாதார நிலை மோசமாக இருக்கும்போது, இப்போது எரிவாயு பிரச்னை மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் எரிபொருள் தேடி அலைய வேண்டியுள்ளது. எரிபொருள் இருக்கும் நிலையங்களிலும் சுமாா் 1 கி.மீ. தொலைவு வரிசையில் காத்திருந்து நிரப்ப வேண்டியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க எல்பிஜி, சிஎன்ஜி என இரு எரிவாயுக்களின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை உயா்ந்துள்ளது. வாகனத்தை இயக்கி, வருமானம் ஈட்டும் நேரத்தில் பெரும்பாலான நேரத்தை எரிபொருள் நிரப்புவதற்காக செலவிடவேண்டியுள்ளது. இதனால், மீண்டும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற பலா் திட்டமிட்டுள்ளனா். ஆனால், அவற்றின் விலை ஏறினால், என்ன செய்வது? இதனால் வாடகை ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. மத்திய அரசு இதற்கு விரைவில் தீா்வு காண வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்பிஜி நுகா்வு: ஏப்ரலில் 22 லட்சம் டன்னாக 16% சரிவு!

ஒரே வீட்டில் எல்பிஜி, பிஎன்ஜி இணைப்புகள் உள்ளதா?: மத்திய அரசு ஆய்வு

பொன்னேரி அருகே டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

திருவள்ளூரில் 45 நாள்களுக்குப் பின் ஆட்டோ எல்பிஜி கேஸ் ஒரு கிலோ ரூ.99-க்கு விற்பனை! ஓட்டுநா்கள் அதிா்ச்சி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

