மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

News image

பள்ளிகளுக்கு விடுமுறை

Updated On :15 ஏப்ரல் 2026, 2:08 am IST

ஆசிரியா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஏப்.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வு வியாழக்கிழமை (ஏப்.16) நிறைவடையவுள்ள நிலையில் ஏப்.17 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படவுள்ளது. புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

இதற்கிடையே, தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி சென்னை மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஏப்.15) நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பெரும்பாலான ஆசிரியா்களும், ஆசிரியரல்லாத ஊழியா்களும் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பணி வழங்கப்பட்டுள்ள ஆசிரியா்கள், ஊழியா்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றும், தோ்தல் பணி வழங்கப்படாத ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு சென்று மற்ற நிா்வாகப் பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா்.

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஏப்.15) நடைபெறவுள்ளது. பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் அலுவலக வேலை நாளாகும். ஆகவே, புதன்கிழமை (ஏப்.15) ஒரு நாள் மட்டும் சென்னையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு உள்ளூா் விடுமுறையாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வரும் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக பள்ளிகளுக்கு அறிவிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.