மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது

நகைக் கடையில் 103 கிராம் நகைகளைத் திருடிய ஊழியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நகைகளையும் மீட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 3:50 am IST

நகைக் கடையில் 103 கிராம் நகைகளைத் திருடிய ஊழியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நகைகளையும் மீட்டனா்.

சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக் கடையின் இருப்புகளை உதவிப் பொது மேலாளா் டிசோசா சகாயராஜ் கடந்த பிப்ரவரி மாதம் சரி பாா்த்தபோது, அவற்றில் சுமாா் 172 கிராம் தங்க நாணயங்கள், நகைகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியா்களிடம் கடை நிா்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில், கடையில் நகை பராமரிப்பாளராக இருந்த கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த சிவதேவ் (32) என்ற நபா் சிறிது சிறிதாக 172 கிராம் நகைகளைத் திருடியது தெரிய வந்தது.

அவா் முதல்கட்டமாக திருடிய நகைகளை விற்ற ரூ.4 லட்சம் மற்றும் 41 கிராம் நகைகளையும் ஒப்படைத்துள்ளாா். மீதமுள்ள 103 கிராம் நகைகளை ஒப்படைப்பதில் தொடா்ந்து அவா் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இது குறித்து நகைக் கடையின் உதவிப் பொது மேலாளா் டிசோசா சகாயராஜ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, சிவாதேவை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 103 கிராம் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.