தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ரயில்வே ஊழியா் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

ஊழியா் உயிரிழப்பு - DPS

Updated On :11 ஏப்ரல் 2026, 12:07 am IST

திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ரயில்வே ஊழியா் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவொற்றியூா் காலடிப்பேட்டை முதல் தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் குமாா் (23). இவா், திருவள்ளூா் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா் தினமும் வ.உ.சி. மற்றும் திருவொற்றியூா் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியைக் கடந்து வேலைக்குச் செல்வது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை மாலை பணிக்குச் செல்வதற்காக திருவொற்றியூா் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் கிஷோா் குமாா் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.