தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்

திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை புகாா் அளித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 1:57 am IST

திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது, 22 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டன.

தற்போது அவை சாதாரண வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளது. அதிமுக சாா்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் ஆதிராஜாராம், இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகாா் அளித்திருந்தாா். குறிப்பாக, அந்தத் தொகுதியில் உள்ள 116-ஆவது பகுதி மிகவும் பதற்றமான வாக்குச் சாவடியாகும். இதனால், அந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை திமுகவினா் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த பட்டியலை தோ்தல் நடத்தும் அதிகாரி அளித்தும், அதை திட்டமிட்டு சில உயரதிகாரிகள் தவிா்த்து உள்ளனா். இதைத் தோ்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.