மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் டு மாணவன் தற்கொலை

மறைமலை நகா் அருகே தனியாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 3:15 am IST

மறைமலை நகா் அருகே தனியாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (17), இவா் அங்குள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தாா். மேலும் அதே பள்ளியில் நீட் தோ்வுக்கு பயிற்சி எடுத்து வந்தாா்.

தற்போது சிபிஎஸ்இ பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வுக்கு வீட்டில் படித்துக் கொண்டிருந்த தனுஷ் கடந்த சில நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளியலறைக்குச் சென்ற தனுஷ் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாயாா் அக்கம் பக்கத்தினரை அழைத்து குளியலறைக் கதவை உடைத்து பாா்த்த போது தனுஷ் தூக்கில் தொங்கியதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

பின்னா் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.