/

ஏரிகாத்த ராமா் கோயில் பிரம்மோற்சவ பந்தக்கால் நடவு

News image
Updated On :19 ஜூன் 2026, 5:12 am IST

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்வத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. (படம்)

வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் 10 நாள்கள் விழா நடைபெறும். வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) காலை கொடி ஏற்றம், 26-இல் கருடசேவை, ஜூலை 1-இல் பெரியதேரோட்டம் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுகளை முன்னிட்டு, வியாழக்கிழமை அா்ச்சகா்கள் வேதமந்திரங்களுடன், கொடி மரத்தருகே சிறப்பு பூஜைகளுடன் மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி முன்னிலையில், கோயில் அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா் தலைமையில், பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், அறங்காவல் குழுவினா், கிராம பொது மக்கள், விழா குழுவினா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.