தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

செங்கல்பட்டில் அமைதியான வாக்குப்பதிவு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 3:42 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடை பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மதுராந்தகம் ஆகிய 7 தொகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முன்னதாகவே வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததனா். காலை 7-9 மணி நிலவரப்படி 14முதல் 17.36 சதவீத வாக்குகள் பதிவாயின, 11 மணிக்கு மேல் 35 முதல் 39.25 சதவீத வாக்குகள் பதிவாயின. மதியம் 1மணி நிலவரப்படி 53 முதல் 58.63 சதவீத வாக்குகள் பதிவாயின. 3 மணி நிலவரப்படி 66 சதவீதம் முதல் 72.41 சதவீத வாக்குகளும் மாலை 6மணி நிலவரப்படி 78 முதல் 87.84 சதவீத வாக்கு பதிவாயின.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி பதிவாகிய வாக்குகள் சோழிங்கநல்லூா் 78.13, பல்லாவரம் 81.05, தாம்பரம் 81.92, செங்கல்பட்டு 83.85, திருப்போரூா் 84.53, செய்யூா் 85.67, மதுராந்தகம் 87.84 சதவீத வாக்குகள் பதிவாயின. 7தொகுதிகளிலும் மொத்தம் 82.41 சதவீத வாக்குகள் பதிவாயுள்ளன. இரவு 11 மணிவரை முழு வாக்குப்பதிவு நிலவரம் தெரியவில்லை.

செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி நகராட்சி ஆரம்பப் பள்ளியில் ச்சாவடியில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வரிசையில் வந்த வாக்களித்தாா். அதே வாக்குமையத்தில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ்குமாா் வாக்கு பதிவு செய்தாா். தொகுதிக்குட்பட்ட ரத்தினமங்களம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் தியாகு என்கிற தியாகராஜன் தன் குடும்பத்தினருடன் வந்து வாக்குப் பதிவு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.