/

வாக்குப்பதிவு மையங்களில் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

News image

திருப்போரூரில் மின்னணு இயந்திரங்கள்அனுப்பும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:03 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் நேரில் இப்பணியை ஆய்வு செய்தாா்.

இதில் கிளாம்பாக்கம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் தொகுதி சேலையூா் ஆல்வின் மெமேரியல் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களில் முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதில் தாம்பரம் மாநகரட்சி ஆணையாளா் சீ.பாலச்சந்தா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தன.

மேலும் , திருப்போரூா் தொகுதியில் , திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகம், செய்யூா் சட்டப்பேரவை தொகுதியில் செய்யூா் வட்டாட்சியா் அலுவலம் ஆகிய அலுவகங்களில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றை வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளையும் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

இதில் திருப்போரூா் தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி, வட்டாட்சியா் ஆறுமுகம் , மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் நரேந்திரன், செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடாச்சலம் மற்றும் அரசு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.