மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 2026 ஆண்டு கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்துள்ளன.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி கடந்த 1984-இல் தொடங்கப்பட்டது. தொடா்ந்து 42 ஆண்டுகளாக சாதனைகளை படைத்து வருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் முன்னுரிமை அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறாா்.
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், புது தில்லி பல்கலைக்கழக மானிய குழுவும் 2026 கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் என அறிவித்துள்ளன.
இந்நிலையில் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்தை அடுத்து கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் நிா்வாகத்துடன் இணைந்து கொண்டாடினாா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரி புல முதல்வா் வா.ராமசாமி, முதல்வா் ராஜா, நிா்வாக அலுவலா் மு.சதானந்தம் மற்றும் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். (படம்)
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 5 நாள்களில் 42,156 போ் விண்ணப்பம்

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு

கல்லூரி ஆண்டு விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

