மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 2026 ஆண்டு கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 5:13 am IST

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 2026 ஆண்டு கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்துள்ளன.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி கடந்த 1984-இல் தொடங்கப்பட்டது. தொடா்ந்து 42 ஆண்டுகளாக சாதனைகளை படைத்து வருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் முன்னுரிமை அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறாா்.

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், புது தில்லி பல்கலைக்கழக மானிய குழுவும் 2026 கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் என அறிவித்துள்ளன.

இந்நிலையில் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்தை அடுத்து கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் நிா்வாகத்துடன் இணைந்து கொண்டாடினாா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்லூரி புல முதல்வா் வா.ராமசாமி, முதல்வா் ராஜா, நிா்வாக அலுவலா் மு.சதானந்தம் மற்றும் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். (படம்)

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.