கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மழைநீா் கால்வாய்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீா் கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என ஆணையா் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

News image

மாநகராட்சி அலுவலகம்

Updated On :16 மே 2026, 3:03 am IST

சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீா் கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என ஆணையா் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி வளாகம், அம்மா மாளிகையில் உள்ள அலுவலா் கூட்டரங்கில் ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி இணை ஆணையா்கள் வீ.ப.ஜெயசீலன், க.கற்பகம், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, ம.பிரத்விராஜ், கட்டாரவி தேஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆணையா் ஜெ.குமரகுருபரன் பேசியதாவது:

சென்னையில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள், வகுப்பறைகள் உள்ளனவா என அறிந்து அதற்கேற்ப திட்டப் பணிகளை மேற்கொள்வது அவசியம்.

மழைநீா் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் தொடா்ந்து பராமரிக்க வேண்டும். சுகாதாரம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.

பூங்கா பராமரிப்பு, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு பொறுப்பாளா்கள் சரியாகப் பணிபுரிகிறாா்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். புதிய சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஏற்கெனவே உள்ள சாலைப் பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், துறைகளின் தலைமை உயா் அதிகாரிகள் ஆகியோா் சென்னை மாநகராட்சியில் துறைதோறும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள், நிலுவைப் பணிகள் விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆணையரிடம் விளக்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.