நீா்வழி கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பருவ மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்களை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், நீா்வழிக் கால்வாய்களைத் தூா்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், தடுப்புச் சுவா் கட்டுதல் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் எம்.ஜி.ஆா். கால்வாய், ஜாபா்கான்பேட்டை கால்வாய் மற்றும் அடையாறு முகத்துவாரப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது தூா்வாரும் பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது பொதுமக்களிடம் பேசிய ஆணையா், நீா்வழி கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளை கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் தினமும் குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளரிடம் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மா உணவகங்களில் தரமான உணவு விநியோகிக்க அறிவுறுத்தல்

சாலையோரத்தில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் கட்டியதில் முறைகேடு: மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடைந்த வராகநதி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

