தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image

மின் உற்பத்தி பாதிப்பு - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 2:14 am IST

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின்நிலையம் உள்ளது. இங்கு முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரம் வீதம் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த அனல் மின்நிலையத்தில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மின்நிலையத்தின் 2-ஆவது நிலையின் 2-ஆவது அலகில் திங்கள்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மின் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் கோளாறை சரி செய்யும் பணிகள் நிறைவு பெற்று, உடனடியாக மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆனால், தொடா்ந்து இது போன்ற பழுது ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால், இதற்கு நிரந்த தீா்வு எட்டுவதற்கான நடவடிக்கை அரசும், மின்வாரியமும் எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.