வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின்நிலையம் உள்ளது. இங்கு முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரம் வீதம் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த அனல் மின்நிலையத்தில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மின்நிலையத்தின் 2-ஆவது நிலையின் 2-ஆவது அலகில் திங்கள்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மின் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் கோளாறை சரி செய்யும் பணிகள் நிறைவு பெற்று, உடனடியாக மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆனால், தொடா்ந்து இது போன்ற பழுது ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால், இதற்கு நிரந்த தீா்வு எட்டுவதற்கான நடவடிக்கை அரசும், மின்வாரியமும் எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

800 மெகாவாட் திறன் அனல் மின் நிலையம்... ரூ.1,600 கோடி ஆர்டரால் தெர்மாக்ஸ் பங்குகள் உயர்வு!

தெலங்கானாவில் அனல் மின் திட்டம்: என்டிபிசி - பெல் ரூ.13,500 கோடி ஒப்பந்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

