நியூயார்க் சிறையில் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தை அமெரிக்க நீதிபதி ஒருவர் புதன்கிழமை (மே 6) வெளியிட்டார்.
அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தாலும், தற்கொலை செய்துகொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அமெரிக்காவில் கோரிக்கை வலுத்ததைத் தொடர்ந்து, 2025 டிசம்பர் 19 ஆம் தேதி அமெரிக்க நீதித்துறையால் அந்தத் தகவல்கள் வெளியிடத் தொடங்கப்பட்டன.
அதன் பின்னர், 2026 ஜனவரி 30 ஆம் தேதி சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட கூடுதல் ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, வெளியிடப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் எப்ஸ்டீன் எழுதியதாகத் தெரிவித்ததாவது:
”அவர்கள் என்னை மாதக்கணக்கில் விசாரித்தார்கள். ஆனால், ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை!“
"நம் வாழ்விலிருந்து விடைபெறுவதற்கான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்வது ஒரு வரம்!"
"நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? அழுது புலம்பவா? இதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இதற்கு எந்தத் தகுதியும் இல்லை!” என அக்கடிதம் முடிவு பெற்றுள்ளது.
எப்ஸ்டீன் இறக்கும்போது, காணாமல் போன சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் ஆகியவை, அமெரிக்க நீதித்துறையின் மீது தொடர்ச்சியான சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
On Wednesday (May 6), a U.S. judge released a suicide note allegedly written by sex offender Jeffrey Epstein a few weeks before his death in a New York prison.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையர் நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக டிரம்ப் உயா்த்தியது ரத்து: அமெரிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

மோடியைப் புகழும் பதிவை பகிா்ந்தாா் அமெரிக்க அதிபா் டிரம்ப்
டிரம்ப் விதித்த புதிய 10% வரி சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


