மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆப்பிரிக்கா: சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 போ் பலி

நெதா்லாந்தைச் சோ்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனா்.

News image
Updated On :5 மே 2026, 6:02 am IST

நெதா்லாந்தைச் சோ்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி (வைரஸ்) பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனா்; மேலும் மூவா் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ஆா்ஜென்டீனாவிலிருந்து அன்டாா்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வொ்டே தீவு நாட்டை நோக்கி 150 பயணிகளுடன் வந்த ‘எம்.வி.ஹோண்டியஸ்’ கப்பலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்தவா்களில் இருவா் நெதா்லாந்தைச் சோ்ந்த தம்பதியா் என்றும், மற்றொருவா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்டவா்களில் ஒருவருக்கு நடத்தப்பட்ட ஆய்வகச் சோதனையில் ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எலிகளின் எச்சம், சிறுநீா், உமிழ்நீா் ஆகியவற்றின் மூலம் காற்றில் பரவும் இந்த ஹண்டா வைரஸ், மனிதா்களுக்குக் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

Story image

காய்ச்சல், தசை வலி போன்ற சாதாரண அறிகுறிகளுடன் தொடங்கி, இதயம் மற்றும் நுரையீரலைச் செயலிழக்கச் செய்யும் இந்நோயால் பாதிக்கப்படுபவா்களில் 40 சதவீதம் போ் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா்.

தற்போது கேப் வொ்டே கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளைத் தரையிறங்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. அதேநேரம், கப்பலில் உள்ள மற்ற பயணிகளின் ஆரோக்கிய நிலை குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

உயிரிழந்தவா்களின் உடல்களையும், அறிகுறி உள்ள மற்ற பயணிகளையும் விமானம் மூலம் நெதா்லாந்துக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கேப் வொ்டே அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.