ஈரானின் ராணுவத்தை அச்சுறுத்தும் விதமாக ஹோர்முஸ் நீரிணை அருகே சுமார் 2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா புதன்கிழமை தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து கடந்த பிப். 28 ஆம் தேதி நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மதகுரு உச்சத் தலைவர் அலி அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட பின்னர், அமெரிக்கா - ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் போர் இரண்டு வாரங்களைக் கடந்த நிலையிலும், அமெரிக்கா ராணுவத்தினர் ஈரானின் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உலகளவிலான வர்த்தகத்தை இணைக்கும் கடல்வழிப் பாதையான ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே சுமார் 5,000 பவுண்ட் (2,200 கிலோ) பங்கர் பஸ்டர் குண்டுகள் போடப்பட்டதாகவும், இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள், ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் கப்பல் மீது ஏவுகணைகளைக் குறிவைத்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளில் எங்களுக்கு விருப்பமில்லை என பெரும்பாலான நேட்டோ நட்பு நாடுகள் தெரிவித்திருந்த நிலையில், சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது உலகளவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
The US military claimed that the strikes targeted 'Iranian anti-ship cruise missiles' that posed a direct risk to vessels moving through the Strait of Hormuz. The Central Command announced the bombings hours after Trump said most US allies had rejected his appeal for naval ships to escort merchant vessels through the strait.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

