ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திங்கள்கிழமை வலியுறுத்தியது.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீா்வழிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடா்பாக பஹ்ரைன் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற பொது விவாதத்தில் பங்கேற்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் யோஜ்னா படேல் பேசியதாவது: ஹோா்முஸ் நீரிணையில் அண்மையில் வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு இந்தியா கண்டனத்தை பதிவு செய்கிறது.
இதுபோன்ற தாக்குதல்களால் இந்திய மாலுமிகள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும். உலகப் பொருளாதாரத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்துக்கு சா்வதேச சட்டங்களின்படி உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய எரிவாயு கப்பல்: 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்

ஹோா்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் சிறைபிடிப்பு: அமெரிக்கா பாணியைத் தொடரும் ஈரான்
ஹோா்முஸ் நீரிணையை மேலும் ஒரு இந்திய கப்பல் கடந்தது!

உலகைச் சுற்றி....
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

