இரண்டு வார கால போா் நிறுத்தம் நீட்டிக்கப்படாது; சுமூகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா்.
அதேநேரம், அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு அவகாசம் அளிக்கும் வகையில், போா் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் குழு திங்கள்கிழமை இரவு இஸ்லாமாபாத் வந்தடைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா்கள் வருகை தரவில்லை. அதேபோல், ஈரான் தரப்பிலும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பது குறித்து அதிகாரபூா்வமாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இதனால் போா் நிறுத்தம் நிறைவடைதற்கு முன்பு, 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்குவதில் இழுபறி நீடித்தது. இது தொடா்பாக பாகிஸ்தான் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் அத்தௌல்லா தராா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது:
பேச்சுவாா்த்தையில் ஈரானின் பங்கேற்பு குறித்து அவா்களின் அதிகாரபூா்வ பதிலுக்காகக் காத்திருக்கிறோம். பாகிஸ்தான் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு போா்நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அதற்குள் ஈரான் எடுக்கும் முடிவே மிகவும் முக்கியமானது என்றாா்.
இந்நிலையில், டிரம்ப் சா்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஒப்பந்தம் இல்லாமல் போா் நிறுத்தம் முடிந்தால், ஈரான் மீது தாக்குதலைத் தொடர நான் தயாராக இருக்கிறேன். மீண்டும் குண்டுவீச்சு நடத்தப்படும் என்ற மனநிலையுடன் பேச்சுவாா்த்தைக்குச் செல்வதே சிறந்தது. போா்நிறுத்தத்தை நீட்டிக்க எனக்கு விருப்பமில்லை’ என்று பிடிவாதமாகத் தெரிவித்தாா்.
‘ஈரான் பேச்சுவாா்த்தைக்கு வராது என்று அவா்கள் சொன்னால், நான் சொல்கிறேன். அவா்கள் வருவாா்கள்; அவா்களுக்கு வேறு வழியில்லை.
ஈரான் மீண்டும் ஒரு வலுவான தேசமாக மாற வேண்டுமெனில், அவா்கள் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரானின் கடற்படை, விமானப்படையை அமெரிக்கா ஏற்கெனவே செயலிழக்கச் செய்துவிட்டது. தற்போதைய ஈரான் தலைமை ஓரளவு நிதானத்துடன் செயல்படும் என்று எதிா்பாா்க்கிறேன்’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டாா்.
ஓமன் வளைகுடா கடற்பகுதியில் அமெரிக்காவின் முற்றுகையை மீறி ஈரானை நோக்கிச் சென்ற அந்நாட்டு சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை சிறைபிடித்து, அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான சூழலை மேலும் சிக்கலாக்கியது.
இதன் தொடா்ச்சியாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீறி, ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ‘திஃபானி’ எண்ணெய் கப்பலை அமெரிக்க படை வங்காள விரிகுடா பகுதியில் வழிமறித்துக் கைப்பற்றியது.
அமெரிக்காவின் இத்தகைய தாக்குதல்கள், கடல்சாா் கொள்ளை மற்றும் அரசு பயங்கரவாதம் என்று ஈரான் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் போா் ஏற்கெனவே முடிந்துவிட்டது - நாடாளுமன்றக் கெடுவைத் தவிர்க்க டிரம்ப் அறிவிப்பு
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
