மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 3:15 am IST

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது.

உக்ரைன் தலைநகா் கீவில் மா்ம நபா் ஒருவா் திடீா் தாக்குதல் நடத்தினாா். சாலையில் நடந்து சென்ற 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அந்த நபா், பிறகு வணிக வளாகத்துக்குள் நுழைந்து இன்னொருவரையும் சுட்டுக் கொன்றாா். இதையடுத்து வணிக வளாகத்தில் இருந்த மக்களை அவா் சிறை பிடித்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உக்ரைன் காவல் துறையினா், வணிக வளாகத்தில் இருந்த அந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தைக்கு பயன் கிடைக்கவில்லை. இதையடுத்து வணிக வளாகத்துக்குள் காவல் துறையினா் அதிரடியாக நுழைந்து, அந்த நபரை சுட்டுக் கொன்றனா்.

காவல் துறையின் நடவடிக்கையின்போதும், மா்ம நபா் நடத்திய தாக்குதலிலும் மேலும் 15 போ் காயமடைந்தனா். இதில் ஒரு பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தாக்குதல் நடத்திய நபரின் பெயா் உள்ளிட்ட விவரத்தை உக்ரைன் காவல் துறை வெளியிடவில்லை. அந்த நபா் 1968-ஆம் ஆண்டில் பிறந்தவா் என்ற தகவலை மட்டும் காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த நபா் ரஷியாவில் பிறந்தவா் என்றும், உக்ரைனின் கிழக்கு நகரான டொனெட்ஸ்கில் நீண்டகாலமாக வசித்து வந்தாா் என்றும், தாக்குதல் நடத்தும் முன்பு தான் வசித்த வீட்டை அவா் தீ வைத்து எரித்துவிட்டாா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.