மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

மேற்காசிய நிலவரம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.

News image

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி

Updated On :17 ஏப்ரல் 2026, 1:43 am IST

மேற்காசிய நிலவரம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை விரைந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவா்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

அமெரிக்கா-ஈரான் இடையே 2 வார கால போா் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், பிரதமா் மோடியை இமானுவல் மேக்ரான் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது அன்புக்குரிய நண்பரான பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வரப்பெற்றது. மேற்காசிய நிலவரம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை விரைந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக் கொண்டோம். மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடரும்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, மேற்காசிய போா் குறித்து மோடியும், மேக்ரானும் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொலைபேசி வாயிலாக உரையாடினா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.