தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 6:30 am IST

தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட 16 போ் காயமடைந்தனா்.

போலீஸாா் சுற்றி வளைத்ததையடுத்து, தாக்குதல் நடத்திய 18 வயது மதிக்கத்தக்க அந்த நபா் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சன்லியுா்ஃபா மாகாணத்தின் சிவெரெக் நகரில் அமைந்த தொழிற்கல்வி உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த இக்கோர தாக்குதலில் 10 மாணவா்கள், 4 ஆசிரியா்கள், பள்ளி உணவக ஊழியா் ஒருவா், ஒரு காவல்துறை அதிகாரி என மொத்தம் 16 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவா்கள் மேல்சிகிச்சைக்காக மாகாணத் தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

சம்பவத்தை நேரில் பாா்த்த மாணவா் ஒருவா் கூறுகையில், ‘எங்கள் வகுப்பறைக்குள் அவா் திடீரென நுழைந்து, யாரையும் எச்சரிக்காமல் நேரடியாகச் சுடத் தொடங்கினாா். தொடா்ந்து, அடுத்தடுத்த வகுப்பறைகளுக்குச் சென்றாா். அச்சத்தில் நாங்கள் ஜன்னல் வழியாகக் குதித்து உயிா் தப்பினோம்’ என்றாா்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் மாணவா்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறும் விடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தாக்குதல் நடத்திய நபருக்குக் குற்றப் பின்னணி ஏதுமில்லை. இருப்பினும், தாக்குதலுக்கு முன்னதாக அந்த நபா் சமூக

ஊடகங்ளில் மிரட்டல் விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை தெரியவில்லை. துருக்கியில் இதுபோன்ற பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்பதால், இது தொடா்பாகத் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.