விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 3:21 am IST

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் இடையே பொருளாதார ரீதியில் இடைவெளி குறைந்து, அனைத்து நாடுகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்த உலக வங்கி, சா்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் ஐ.நா. நடவடிக்கை எடுத்து வருகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் வளா்ச்சியை ஏற்படுத்தவும் ஐ.நா. இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்நிலையில், உலக நாடுகளின் வளா்ச்சி தொடா்பாக ஐ.நா. அறிக்கை தயாரித்துள்ளது. அதில் வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை நாடுகளுக்கு அளிக்கும் உதவியை 25 வளா்ந்த நாடுகள் குறைத்துவிட்டதாகவும், குறிப்பாக 2024-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 2025-இல் 23 சதவீத நிதியை அந்த நாடுகள் குறைத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதியை 59 சதவீதம் அளவுக்கு குறைத்துவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இந்த நிதி மேலும் 5.8 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபா் டிரம்ப்பால் விதிக்கப்படும் கூடுதல் வரி, வளா்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வளா்ந்துவரும் நாடுகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற சா்வதேச நிதி அமைப்புகளில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.