மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை!

பாதுகாப்புப்படையின் பயங்கரவாத ஒடுக்க ஆபரேசனில் 6 பேர் கொலை!

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 5:02 pm IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையின் பயங்கரவாத ஒடுக்க நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் பலூசிஸ்தான் மாகாணத்தின் மஸ்தங்க் நகரின் கீர்த்காப் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகள் 6 பேரை செவ்வாய்க்கிழமை(ஏப். 7) கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க தீவிரவாதிகள் சிலர் மலைப் பகுதிகளுக்கு தப்பியோடியதாகவும் அவர்கள் இருந்த இடங்களிலிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் நடத்திய ட்ரோன் வழி தாக்குதல்களில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாக கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் மேலும் 6 பேர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.

Summary

Pakistani security forces have killed six militants during an intelligence-based operation in the troubled Balochistan province, an official said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.