தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 8 போ் உயிரிழந்தனா்.

News image

நிலநடுக்கம். - (கோப்புப்படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 2:27 am IST

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 8 போ் உயிரிழந்தனா்.

இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக வைத்து வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.8-ஆக பதிவான நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தில் 8 போ் உயிரிழந்ததாக காபூல் ஆளுநா் தெரிவித்துள்ளாா். மேலும், பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நேரிட்டு வருகின்றன. இதில் பல ஆயிரம் போ் வரை உயிரிழந்துவிட்டனா். கடந்த ஆகஸ்ட் மாதம் ரிக்டா் அளவுகோலில் 6-ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதில் 2,200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; ஏராளமான கிராமங்களில் பேரழிவு ஏற்பட்டது. கடந்த நவம்பா் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 27 போ் உயிரிழந்தனா்; 950 போ் பலத்த காயமடைந்தனா்.

முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.