ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 இ மற்றும் ஏ 10 ரக போர் விமானங்களை, ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் போரில் ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் 12,300-க்கும் அதிகமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே, ஈரானின் தென்மேற்கு மாகாணங்களின் மீது தாக்குதல் நடத்த முயன்ற அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 இ ஸ்டிரைக் ஈகிள் ரக போர் விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றொரு தாக்குதலில் அமெரிக்காவின் ஏ 10 ரக போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, அந்த போர் விமானங்களில் இருந்து அவசரமாக வெளியேறிய விமானிகளில் ஒருவரை அமெரிக்க மீட்புப் படைகள் மீட்டுள்ளன. மேலும், மற்றொரு விமானத்தின் விமானியைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இத்துடன், தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், உயிர் பிழைத்த விமானியைக் கண்டுபிடித்து ஒப்படைக்க அந்நாட்டு அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் அதிக தூரம் வேகமாகப் பயணித்து தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்தவை. இறுதியாக, கடந்த 2003 ஆம் ஆண்டு இராக் மீதான படையெடுப்பின்போது அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that Iranian forces shot down advanced U.S. F-15E and A-10 fighter jets that were involved in an attack on Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போரை நிறுத்த 30 நாள்களுக்குள் தீர்வு: அமெரிக்காவை முடிவெடுக்கச் சொல்லும் ஈரான்!

எதிரிகளுக்கு மாரடைப்பே ஏற்படும்! - அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக ஈரான் எச்சரிக்கை!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!

அமெரிக்காவின் எஃப்-18 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்! - விடியோ
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

