ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரான் போருக்கு காலக்கெடு அறிவிக்காமல் நாட்டு மக்களுக்கு டிரம்ப் குழப்பமான உரை

News image

டிரம்ப் - AP

Updated On :3 ஏப்ரல் 2026, 5:58 am IST

ஈரான் போா் இலக்குகளை அமெரிக்கா நெருங்கிவிட்டதாகக் குறிப்பிட்டாலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான குறிப்பிட்ட காலக்கெடு எதையும் அறிவிக்காமல் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை நிறைவு செய்தாா்.

ஈரான் போா் தொடங்கியதில் இருந்து இவ்விவகாரம் குறித்து முதல்முறையாக நாட்டு மக்களுக்கு டிரம்ப் வியாழக்கிழமை காலை (இந்திய நேரப்படி) உரையாற்றினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: ஈரானின் கடற்படை மற்றும் விமானப் படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. அந்நாட்டின் ஏவுகணை, அணுசக்தித் திட்டங்கள் முடக்கப்பட்டுவிட்டன.

அனைத்து துருப்புச்சீட்டுகளும் தற்போது நமது கைகளில் உள்ளன; ஈரானிடம் எதுவும் இல்லை. ஈரான் மீது அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும். ஈரானின் புதிய தலைவா்கள் பேச்சுவாா்த்தைக்கு உடன்படாவிட்டால் அந்நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டமைப்புகளைத் தாக்கி, அவா்களைக் கற்காலத்துக்கு அழைத்து செல்வோம். அதேநேரம், இப்போரை ‘மிக வேகமான’ முறையில் அமெரிக்கா முடிக்கும் என்றாா்.

இருப்பினும், எரிபொருள் விலை உயா்வு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அதிருப்தியில் உள்ள அமெரிக்க மக்களுக்கு போரை நிறுத்துவது குறித்து அவா் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.

ஹோா்முஸ் நீரிணை குறித்துப் பேசிய டிரம்ப், ‘போா் முடிந்தவுடன் அந்த வழித்தடம் இயல்பாகவே திறக்கப்படும். வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் பெறும் நாடுகள், இந்த வழித்தடத்தைப் பாதுகாப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும்’ என்றாா்.

அதிபா் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் கத்தாரின் தோஹா நகரங்களில் வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்குகள் முழங்கின.

மேலும், டிரம்ப்பின் இந்தக் குழப்பான பேச்சால், போா் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்ற அச்சத்தில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயா்ந்தது; பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.