தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில், விதிகளுக்குப் புறம்பாக சுமாா் 40 கோடி டாலா் செலவில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

News image

வெள்ளை மாளிகை வளாகத்தில் கலையரங்கம் அமைப்பதற்காக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:15 am IST

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில், விதிகளுக்குப் புறம்பாக சுமாா் 40 கோடி டாலா் செலவில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டு, இப்புதிய கட்டுமானத்தை டிரம்ப் நிா்வாகம் மேற்கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தின் முறையான அனுமதி பெறாமல், இப்பணிகளைத் தொடரக் கூடாது என நீதிபதி ரிச்சா்ட் லியோன் உத்தரவிட்டுள்ளாா்.

தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படும் வெள்ளை மாளிகையின் வரலாற்றுப் பெருமையைச் சிதைப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அளித்த தீா்ப்பில், ‘அதிபா் என்பவா் வெள்ளை மாளிகையின் பாதுகாவலா் மட்டுமே தவிர; அதன் உரிமையாளா் அல்ல’ என்று காட்டமாகச் சுட்டிக்காட்டினாா்.

தனியாா் நிதி பங்களிப்புடன் இப்பணி நடைபெறுவதாக டிரம்ப் தரப்பு வாதிட்ட போதிலும், ‘நாட்டின் அடையாளமாகத் திகழும் ஒரு கட்டடத்தில் சட்டபூா்வ அனுமதியின்றி மாற்றங்கள் செய்வதை ஏற்க முடியாது’ என நீதிமன்றம் மறுத்துவிட்டது.

‘வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு தொடா்பான சுரங்கப் பாதைகள், பதுங்கு குழிகள் அமைக்க அனுமதியளித்த நீதிமன்றம், கலையரங்கத்துக்கு மட்டும் தடை விதிப்பது முரணானது’ என டிரம்ப் அதிருப்தி தெரிவித்தாா். இத்தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.