வாழ்க்கையில் கணவரும், மனைவியும் ஒருமித்து இல்லறம் நல்லறமாக அமைதல் நலம் பயக்கும். இத்தகைய நல்வாழ்வில் விரிசல் ஏற்படுதல் பிரிவுக்குக் காரணியாகின்றது.
ஒழுக்கநிலையினின்று வழுவும் காலத்தில் இல்லறத்தில் பூசல் ஏற்படுதல் இயல்பு. அந்த வகையில் தலைவனொருவன் கூடாவொழுக்கத்தில் தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடினான். தலைவி பெருந்துயருற்றாள். சிறிது காலத்தில் பரத்தையை விடுத்து தலைவியைச் சேர எண்ணிய தலைவன், தலைவியின் உற்ற தோழியின் உதவியை நாடினான். தோழி தலைவனின் போக்கைக் கடிந்துரைக்கின்றாள்.
தடமருப்பு எருமைப் பிணர்ச் சுவல்
இரும் போத்து,
மடநடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண்கயம் துடுமெனப் பாய்ந்து,
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை
இருள்புனை மருதின் இன் நிழல் வதியும்
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயனும், அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே; அவரும்,
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,
நன்றி சான்ற கற்போடு
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.
- (நற். பா -330)
எருமையானது நாரைக்கூட்டம் பறந்தோடும் வகையில் பொய்கையில் புகுந்து தன் வருத்தம் தீர்ந்த பின்னும் தனக்குரியதான தொழுவத்தில் தங்காது இனிய மருதநிழலில் தங்கும் ஊரன் எனத் தலைவனைப் பழிக்கிறாள் தோழி.
தலைவனை எருமைக்கடா எனவும், தனக்குரிய இல்லம் சேராது வேறிடம் செல்லும் கடாவினைப் போல் பரத்தையிடம் சென்று சேர்ந்தான் என உள்ளுறையாக வெளிப்படுத்துகிறாள்.
பரத்தையைக் குலமகளிரைப்போல நினைத்துக் கொண்டு, இல்லத்துக்கு அழைத்து வந்தாலும் உண்மையான காதலன்பு அவர்களிடத்தில் ஏற்படாது.
தலைவியைப் போன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு நன்றி சான்ற கற்போடு அந்தப் பரத்தை அமைதல் அரிதினும் அரிது என்பதைத் தலைவனிடம் புலப்படுத்துகிறாள் தோழி.
இந்தப் பாடலில் உண்மையான காதலும் குழந்தைப்பேற்றின் உன்னதமும் தோழியின் வாயிலாகத் தலைவனுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
தலைவியின் உயர்வுக்குப் பரத்தை இணையாக மாட்டாள் என்பதையுணர்த்தி, மனைவிக்கும் பரத்தைக்குமான வேறுபாடு உணர்த்தப்பட்டு, பரத்தை இல்லாளாக என்றும் ஆதல் அரிதுஎன்பதைத் தோழி பறைசாற்றியுள்ளாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு விஜய் நேரில் நன்றி
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவிக்கிறார் விஜய்!

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
