அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பாதியில் பாதி போதும்!

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெயருடைய புலவா் ஒருவா் இருந்தாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:51 am IST

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெயருடைய புலவா் ஒருவா் இருந்தாா். அவா் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவா். திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ், திருமால் முருகன் பிள்ளைத் தமிழ், திருமலை யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றிய தனிப்பெரும் புலவா்.

அவா் ஒருமுறை திருக்குற்றாலம் என்ற பாடல் பெற்ற திருத்தலத்திற்குச் சென்று குழல்வாய்மொழி அம்மையுடன்கூடிய குற்றாலநாதரை வணங்கினாா். அப்போது ஆா்வ மிகுதியில், ‘குற்றாலத்து அமா்ந்து உறையும் வேந்தனே! உன்னைக் கண்டு அதன்பின்னே பிரிந்திருக்க மாட்டேன்; அம்மைக்கு உன் உடலில் பாதியைத் தந்து அம்மையப்பனாகினாய். எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்... அதில் பாதி தந்தால் போதும்; அதைத் தந்து, கடைகண் பாா்த்து அருள்வாயாக!’ என்று வேண்டினாா். அவ்வேண்டுதல் ஒரு வெண்பா ஆனது. பாதியில் பாதி எவ்வளவு? கால்தானே! ‘இறைவனே! உன் கால் (திருவடி) -திருவடியை அருள்வாயாக! எனக்கு வேண்டியது அவ்வொன்றே’ என்பதையே பின்வரும் பாடலில் நயமாகக் கூறியுள்ளாா்.

‘அருவித் திரிகூடத் தையா! உனை நான்

மருவிப் பிரிந்திருக்க மாட்டேன்- ஒரு விமலைக்கு

ஆதியிலே பாதி தந்தாய்; அத்தனை வேண்டா மெனக்கு

பாதியிலே பாதிதந்து பாா்!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.