தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

நினைவுச் சுடர்!: தேச பக்தி!

சர்தார் வல்லபாய் படேல், ஒருமுறை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஓர் ஆங்கிலேயரும், ஒரு பிரெஞ்சுக்காரரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

News image
Updated On :28 மார்ச் 2020, 6:38 pm IST


சர்தார் வல்லபாய் படேல், ஒருமுறை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஓர் ஆங்கிலேயரும், ஒரு பிரெஞ்சுக்காரரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 
வல்லபாய் படேலை கவனித்த அந்த மேலைநாட்டினர் அவர் முன் தங்கள் நாட்டின் பெருமையை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டனர். இதைக் கவனித்த வல்லபாய் படேல் அமைதியாக இருந்தார். 
பிறகு மேலை நாட்டின் புகழை படேலுக்கு உணர்த்தும் வகையில், பிரெஞ்சுக் காரர் ஆங்கிலையரைப் பார்த்து, ""நான் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருக்காவிட்டால் நிச்சயமாக ஆங்கிலேயனாகப் பிறந்திருப்பேன்...'' என்றார். 
அதற்கு ஆங்கிலேயர், ""நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருக்கா விட்டால், பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருப்பேன்...'' என்றார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு பேசாமல் இருந்தார் படேல்.
படேலை சீண்டும் வகையில், ""நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம்!.... நீங்கள் எதுவும் பேசவே இல்லையே?.... ஏனோ?'' என்றார் ஒருவர். 
படேல் நிமிர்ந்து உட்கார்ந்தார். பிறகு அவர்களைப் பார்த்து, ""அதெற்கென்ன!.... பேசுகிறேனே!..... ஒரு வேளை நான் இந்தியாவில் பிறந்திருக்காவிட்டால், அதற்காக வெட்கித் தலை குனிந்திருப்பேன்!'' என்று கூறினார். 
இதைக் கேட்ட ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் படேலின் தேசபக்தியைக் கண்டு வியந்து பாராட்டினர். 

(பெரியோரின் வாழ்வில் சில சுவையான நிகழ்ச்சிகள்.... என்ற நூலிலிருந்து....)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.