தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பலாக்காய்க் கறி

தோல் சீவிய பலாக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

News image

பலாக்காய்க் கறி

Updated On :29 மார்ச் 2026, 4:06 am IST

தேவையான பொருள்கள்:

பலாக்காய் - 400 கிராம்

சிறிய வெங்காயம் - 4

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 4 பல்

மஞ்சள் பொடி, சீரகப்பொடி, சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

புளித்த தயிர்- 100 மில்லி

கொத்துமல்லி - சிறிதளவு

மிளகாய் தூள், எண்ணெய்,

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தோல் சீவிய பலாக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், அரைத்த விழுதைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் பலாக்காய்த் துண்டுகள், மஞ்சள் பொடி, சீரகம், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து மிதமான தீயில் பலாக்காயை வேக விட வேண்டும். அடிபிடிக்காமல் கிளறி பலாக்காய் நன்றாக வெந்ததும் கீழே இறக்கி கொத்துமல்லித் தழையைக் கிள்ளிப்போடவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.